இடைக்காடர் சித்தர்
இடைக்காடர் சித்தர் – வரலாறு இவர் பெயர், இடைக்காடர்! நிச்சயம் இது இவர் இயற்பெயரல்ல.. இது, காரணப் பெயர். பெயரைப் பிளந்து பாருங்கள். உண்மை புரியும். இடை என்பதில் இவர் இடையர் குலத்தவர் என்பதும், பின்னர் காட்டையே தன் இருப்பிடமாகக் கொண்டதனால் இடைக்காடர் என்றாகி விட்டார் என்பதும் புரியும். தொண்டை மண்டலத்தில் ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள, இடையன்மேடு என்ற கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டே காலம் கழித்தவர்… சிறு வயதிலேயே, ‘நான் யார்?’ என்கிற கேள்வியில் விழுந்துவிட்டவர். சரியானவிடை கிடைக்காமல் திண்டாடியவர், திணறியவர்… ஆடுகள் மேயும்போது அதைப் பார்த்து பல கேள்விகள் கேட்டுக்கொண்டவர். காட்டில் பொசிந்து கிடக்கும் இலை தழைகளை ஆடுகள் உண்டு பசியாறுகின்றன… அந்த ஆட்டையே சிங்கமும் புலியும் உண்டு பசியாற்றிக் கொள்கின்றன. இதைப் பார்க்கும்போது, ஒன்றுக்குள் ஒன்று அடங்குகிறதே…! என்று எண்ணி, வியந்தவர். அப்படியே, எதையும் தன்னுடையது என்று எண்ணாதவர். இடைக்காடர் சித்தர் – போகர் சித்தரை...
Read More