சுந்தரானந்தர் சித்தர்
சுந்தரானந்தர் சித்தர் வரலாறு நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர் என்பார்கள். அதனினும் சிறந்தது மதுரையம்பதி என்றால், துளியும் மிகைகிடையாது. அதிலும் அபிஷேக பாண்டியனின் காலத்தில் மதுரை நகரம் வடிவிலும் சரி, பொலிவிலும் சரி பூரித்துக் கிடந்தது. சிறப்பு பெற்ற மதுரை மாநகரின் வீதிகளில் அறிஞர் சங்கங்கள் நிரம்பியிருந்தன. குதிரை வீரர்களின் உலாக்களுக்கும், சிவிகைகளின் ஊடு நடைக்கும் நடுவே யாராவது இரண்டுபேர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் பேசிக்கொள்வது கவிதையாகத்தான் இருக்கும். அதில் குற்றம் காண்பதும் பின் அரண்மனை முற்றம் ஏகுவதும் சாதாரணமாக நடக்கும். தமிழ், திருநடனமாடிய நாட்கள் அவை. ஆயினும் மனித சக்தியின் புதுப்புது பரிமாணங்கள் பற்றி பெரிய ஞானம் யாருக்கும் இல்லை என்றே கூறவேண்டும். சோமசுந்தரர் ஆலயம் ஏகுபவர்கள் கூட, இறைவனை ஒரு நிகரில்லாத சக்தியாகக் கருதி பொன் கேட்டார்கள், பொருள் கேட்டார்கள். ஒருவர்கூட நிகரில்லாத ஞானத்தைக் கேட்கவில்லை… கேட்கத் தெரியவில்லை. இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதற்கென்றே இறைவனும் சோமசுந்தரனாய் ஒரு கட்டிளம்...
Read More