நாட்டு கோழி வளர்ப்பு
நாட்டு கோழி வளர்ப்பு இந்திய மக்கள் தொகையில் பெரும்பாளானோர் கிராமங்களிலேயே வாழ்கின்றனர். எனவே,கிராமப்புற வளர்ச்சியே இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. இவர்களின் முக்கிய தொழில் உழவுத் தொழில், கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புப்பாகும். கோழி வளர்ப்பு என்பது நாட்டு கோழி, வீரிய இரக முட்டை மற்றும் இறைச்சி கோழி, ஜப்பானிய கடை,வான் கோழி, வாத்து, கினிக்கோழி ஈமு ஆகியவற்றை உள்ளடக்கியதுதாகும். தனிமனிதன் ஆண்டுக்கு 180 முட்டைகளும் 15 கிலோ இறைச்சி உட்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் தனிமனிதன் 1 ஆண்டு 47 முட்டைகளும்,1.7 கிலோ இறைச்சி கிடைக்கின்றது. மாறிவரும் உணவு பழக்கம், பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் தரமான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு முதலிய காரணங்களால் விலங்கின்ப் புரதத் தேவை அதிகரித்து வருகிறது. விலங்கினப் புரதத் தேவையை பூர்த்தி செய்ய பால், முட்டை, இறைச்சி வழங்கும் கால்நடை மற்றும்...
Read More